என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » கோத்தகிரி வாலிபர் தற்கொலை
நீங்கள் தேடியது "கோத்தகிரி வாலிபர் தற்கொலை"
கோத்தகிரி அருகே வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
கோத்தகிரி:
கோத்தகிரி அருகே உள்ள வள்ளுவர் காலனியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் ரகு (வயது 21), கட்டுமான தொழிலாளி. சம்பவத்தன்று தனது நண்பர்களுடன் அதே பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்றார்.
அப்போது முன்னால் சென்ற சரக்கு வாகனத்தை முந்தி செல்ல முயன்றதாக தெரிகிறது. இதனால் ரகுவுக்கும், குமரன் காலனியை சேர்ந்த வேன் டிரைவர் கருணாகரனுக்கும் (31) இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த ரகு, சரக்கு வாகனத்தின் கண்ணாடியை உடைத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து கோத்தகிரி போலீசில் டிரைவர் கருணாகரன் புகார் அளித்தார். புகாரையடுத்து ரகுவிடம் விசாரணை நடத்திய போலீசார் உடைக்கப்பட்ட கண்ணாடியை மாற்றித்தரவேண்டும் என்று கூறினர்.
இந்தநிலையில் நேற்று ரகு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் இது குறித்து விசாரித்தபோது வேன் டிரைவர் பீர் பாட்டிலை உடைத்து ரகுவின் கழுத்தில் குத்தியுள்ளார். காயத்துக்காக கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரியில் ரகு சிகிச்சை பெற்றார். டிரைவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் போலீசார் ஒருதலைப்பட்டசமாக ரகு மீது நடவடிக்கை எடுத்ததால் அவர் தற்கொலை செய்து கொண்டார் என்று தெரிய வந்தது. இதனால் ரகுவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுமதிக்காமல் போராட்டம் நடத்தினர்.
இது குறித்து தகவல் அறிந்த கோத்தகிரி சப்-இன்ஸ்பெக்டர்கள் நசீர், கவுதம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சம்பந்தப்பட்ட சரக்கு வாகன டிரைவர் கருணாகரனிடமும் விசாரணை நடத்தியதாகவும், ரகு அவசரப்பட்டு முடிவு எடுத்து விட்டதாகவும் கூறினர். இதில் சமாதானம் அடைந்த கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டனர். பின்னர் ரகுவின் உடலை பிரேத பரிசோதனைக்காக கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து கோத்தகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
கோத்தகிரி அருகே உள்ள வள்ளுவர் காலனியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் ரகு (வயது 21), கட்டுமான தொழிலாளி. சம்பவத்தன்று தனது நண்பர்களுடன் அதே பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்றார்.
அப்போது முன்னால் சென்ற சரக்கு வாகனத்தை முந்தி செல்ல முயன்றதாக தெரிகிறது. இதனால் ரகுவுக்கும், குமரன் காலனியை சேர்ந்த வேன் டிரைவர் கருணாகரனுக்கும் (31) இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த ரகு, சரக்கு வாகனத்தின் கண்ணாடியை உடைத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து கோத்தகிரி போலீசில் டிரைவர் கருணாகரன் புகார் அளித்தார். புகாரையடுத்து ரகுவிடம் விசாரணை நடத்திய போலீசார் உடைக்கப்பட்ட கண்ணாடியை மாற்றித்தரவேண்டும் என்று கூறினர்.
இந்தநிலையில் நேற்று ரகு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் இது குறித்து விசாரித்தபோது வேன் டிரைவர் பீர் பாட்டிலை உடைத்து ரகுவின் கழுத்தில் குத்தியுள்ளார். காயத்துக்காக கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரியில் ரகு சிகிச்சை பெற்றார். டிரைவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் போலீசார் ஒருதலைப்பட்டசமாக ரகு மீது நடவடிக்கை எடுத்ததால் அவர் தற்கொலை செய்து கொண்டார் என்று தெரிய வந்தது. இதனால் ரகுவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுமதிக்காமல் போராட்டம் நடத்தினர்.
இது குறித்து தகவல் அறிந்த கோத்தகிரி சப்-இன்ஸ்பெக்டர்கள் நசீர், கவுதம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சம்பந்தப்பட்ட சரக்கு வாகன டிரைவர் கருணாகரனிடமும் விசாரணை நடத்தியதாகவும், ரகு அவசரப்பட்டு முடிவு எடுத்து விட்டதாகவும் கூறினர். இதில் சமாதானம் அடைந்த கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டனர். பின்னர் ரகுவின் உடலை பிரேத பரிசோதனைக்காக கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து கோத்தகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X